கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் திறப்பு(காணொளி)

362 0

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்த சமூகப்பற்றாளர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாகவும், யுத்தத்தின் போது உயிரிழந்த அவருடைய மகன் நினைவாகவும், அவரது குடும்பத்தினரால் குறித்த பேருந்துத் தரிப்பிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.