மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

320 0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

அலவ்வ – கிரிஉல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள குடகம்மன பிரதேசத்தில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்தத் திட்டமானது மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாம் கட்டம் 39 கிலோமீற்றர்களை கொண்டதாகும்.

இதில் மீரிகம, நாக்கலகமுவ, மல்பிட்டிய, பொத்துஹர, குருநாகல் ஆகிய பகுதிகளில் ஐந்து இடைமாறல்களும் அமைக்கப்படவுள்ளன.

2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நான்கு கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.