வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

360 0

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரால் இந்த குழு அமைக்கப்பட்டது

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை அடுத்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில் குழுவின் விசாரணைக்குழுவின் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கவேண்டும் என்று வடமாகாணசபையின் அமர்வின்போது கோரிக்கை ஒன்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்தே அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் அறிவித்தார்.