நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு(காணொளி)

311 0

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு யூலை மாதம் 14 ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அம்மனுக்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டதாகவும், குறித்த நகைகளே திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு முறையிடப்பட்டதை அடுத்து, பொலிஸார் மோப்பநாய்களுடன் ஆலய கட்டிட வளாகத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இத்தோட்டத்தில் உள்ள ஒருவரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.