வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்: சரத்குமார்

246 0

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம், வறட்சி மாநில அறிவிப்பு மற்றும் கிருஷ்ணாநதி நீர் பெறுவதற்கான முயற்சி என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல சென்னையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை குறையும். அதே போல கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக தற்போதுள்ள சமச்சீர் கல்வி முறையின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.அதன் பின்னர் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது, நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.