பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

254 0

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வரை சந்தித்த பின் விழா குழுவினர் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் இன்று சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி தமிழக சட்டமன்றப் பேரவையில் விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டமைக்காக ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் முதல்வருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.