மதுவரி திணைக்களத்தின் கொழும்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த தேடுதல் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதல் நடத்தும் போது ஒரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
மதுவரி திணைக்களத்தின் பரிசோதகர் குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்த தேடுதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.