பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு செல்லாதது என் தவறு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

150 0

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இருக்கட்டும், ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை நன்கு அறிவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குறிப்பிட்டார்

இதன் போது,குறுக்கிட்ட  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில்கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

நான் தான் கலந்து கொள்ளவில்லை. அது என் தவறு, பாதுகாப்பு சபையில் பேசப்பட்ட விடயங்கள், முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டது என  சபையில் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில்  பேசப்பட்ட விடயங்கள், முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள்ன்னர்  எனக்கு அறிக்கப்பட்டதாக சபையில் அறிவித்தார்.