பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம்

169 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை இன்று (22) பிற்பகல் அனுப்பிவைத்துள்ளார்.

பதவி விலகியதன் பின்னர்,  அனைத்துக்கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும். அதன் அமைச்சரவை  சிறியதாக    அமையவேண்டும்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.