பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் வத்திக்கானுக்கு புறப்பட்டனர்

238 0

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 30 பேர் இன்று (22) காலை வத்திக்கான் நோக்கி பயணமாகினர்.

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்ஸின் அழைப்பின் பேரில் பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 30 பேர் உள்ளிட்ட  60 பேர் அடங்கிய குழுவினர் வத்திகான் நோக்கி புறப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு  தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்கள் நடைபெற்று நேற்றுடன் 3 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.