திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்- இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

224 0

திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என சட்டசபையில் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், “சென்னையை சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தற்போது மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக விமான நிலையம் அருகே உள்ள திரிசூலம், பொழிச்சலூர் ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது.
இந்த ஊராட்சிகளுக்கு சாலை போக்குவரத்து பணிக்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை. எனவே இந்த ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஆதாரம் வழங்க வேண்டும்” என்றார்.
இதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கையில், “தாம்பரம் மாநகராட்சியுடன் இந்த பகுதிகள் இணைக்கப்பட்டு இருந்தாலும் அந்த பகுதி பிரதிநிதிகள் மூலம் நகர்ப்புற வளர்ச்சித்துறை சாலைகளை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்படும்” என்றார்