ஜல்லிக்கட்டு போராட்டங்கள்; ஓய்ந்துள்ள நிலையில் எருமை பந்தயத்திற்கு போராட்டங்கள்

254 0

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சற்று தனிந்துள்ள நிலையில் தென்னிந்திய மாநிலமான கர்நாட்டகாவில் எருமை பந்தயத்திற்கு அனுமதி வழங்குமாறு போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.
கன்னட மாநிலத்தில் கம்பளா என அழைக்கப்படும் கன்னட பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமது பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய போட்டிகளை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி கன்னட மாநில மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு எதிர்கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்த நிலையில் எருமைப் பந்தயத்தை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கு கர்நாட்டகா மாநில அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.