ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை – ஜே வி பி

240 0

சொத்துள்ள வகுப்பினரின் வசமுல்ல இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தம்புத்தேகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அத்தியாவசிய சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை.
மாணவர்களின் கல்வியில் அநீதி இழைக்கப்படுகின்றது.

பிள்ளைகள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது.

ரோபோக்களை போன்ற ஒரு எதிர்கால சமுதாயம் உருவாக்கப்படுகின்றது.

இவர்கள் ஆரோக்கியமான சமூகமாக உருவாகுவது சாத்தியமற்றது.

சிறந்த ஒரு சமூக சூழ்நிலையை உருவாக்க முடியாக அரசாங்கம் பயணற்றதாகும்.

எனவே கடந்த 69 வருடங்களாக தொடர்கின்ற சொத்துள்ள வர்;க்கத்தினரின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து சாதாரண பொதுமக்களின் கைகளுக்கு ஆட்சி கைமாற்றப்பட வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.