ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையின் ஒருவருக்கு விளக்கமறியல் ஒருவருக்கு பிணை

265 0

கல்கிசை கடற்கரை பகுதியில் வைத்து ரஷ்ய பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டிருந்த மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டார்.

மற்றையவர் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண்ணுக்கு காவற்துறையை சேர்ந்த குறித்த இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரஷ்ய நாட்டு பெண், கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறையிட்டதனை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.