ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

186 0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரைஏக்கர் சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே உளவளசிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.