கல்முனையின் ஆணின் உடலம் மீட்பு

275 0

கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் ஆணொருவரின் உடலம் அவரது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

உடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தை சேர்த்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறப்பதற்கு முன்னர் தனது உறவினர்களுடன் விருந்துபசாரத்தில் ஈடுப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.