காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கலைஞர் ஜக்சன் அந்தோனி தனது ஆதரவு

174 0

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரசாங்கத்திற்கும் எதிராக பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்திற்கு இலங்கை கலைஞரான ஜக்சன் அந்தோனி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

2016ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முழுவதிலும் ஒரு கலைஞன் என்ற வகையில் நடுநிலை வகித்து வந்தேன். எனினும் இன்றைய தினம் மக்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Gallery