ஜிம்பாப்வேயில் சோகம் – பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி

216 0

ஜிம்பாப்வேயில் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள சிமானிமானி கிராமத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 35 பேர் பலியாகினர். மேலும் 71 பேர் காயமடைந்தனர்.
விசாரணையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
ஜிம்பாப்வேயில் சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கான சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என்று ஐநா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.