சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு

254 0

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், சுவிஸர்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ஒருவர், 2009ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இருந்து விலகி, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்தார்.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு சுவிஸர்லாந்து அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையை வந்தடைந்த அவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததாக, ஜெனிவா மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தில், குறித்த இலங்கை அகதி குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு 30 ஆயிரம் யூரோக்களை நஸ்டஈடாக வழங்க வேண்டும் எனவும், வழக்கு நடத்திய செலவாக 4 ஆயிரத்து 770 யூரோவை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.