மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

258 0

முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர்.

மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறி இடம்பெற்ற வாள்வீச்சில் ஐவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டதாகவும், இதனை அவதானித்த வீதியால் சென்ற ஒருவர் அவர்களை விலக்குவதற்கு முற்பட்டபோது அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.