இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது- பழனி திகாம்பரம்

237 0

இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ், சிங்கள மக்கள் இனி எப்போதும் இடமளிக்க போவதில்லை.

நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது நாட்டில் இனவாதத்தை தூண்டி நாட்டை ஆட்சி செய்தார் எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.