வரண்ட காலநிலை மீண்டும் தொடரும்

235 0

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் சில நாட்களில் குறைவடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில், மார்ச் மாதம் இறுதிவரை வட்சியுடனான காலநிலை மீண்டும் நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றம் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் காலநிலை அவதான நிலையம் எதிர்வு தெரிவித்துள்ளது.