சுயநலத்திற்காக பொதுமக்களை பயன்படுத்த வேண்டாம் – துமிந்த திஸாநாயக்க

248 0

அரசியல்வாதிகள் தமது நலன்கருதி பொதுமக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தமது நலனுக்காக பொதுமக்களை பயன்படுத்தும் நிலைமையை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

இதனூடாக மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றனர்.

தலைவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சரியல்ல என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.