ஹிக்கடுவையில் இந்தியப் பிரஜை பலி

242 0

ஹிக்கடுவைக் கடலில் குளிக்கச் சென்ற இந்தியப் பிரஜையொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

நேற்றுப் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 29 வயதுடைய லக்ஷ்மன் ராவன் என்பரே பலியாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

நீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு, கராபிடிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் பலியாகியுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.