பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பைஸர் முஸ்தபா

281 0

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், மருத்துவமனைகள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அண்மையில், நாய்களை கொண்டுவந்து விடுவதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக பிரதேச மக்கள் முறையிடுவதாக கூறினார்.

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை, சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்குவதற்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, நடவடிக்கை எடுத்துள்ளார்.