அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிட்டுள்ளார்- மலிக் சமரவிக்ரம

269 0

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலைக்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் சிறிய தொகை பணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதாக குறித்த  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து தவறான என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச அளவையாளர்களால் அளவிடப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக அந்த இடம் 99 வருட குத்தகை அடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.