ஆதன வரியை இம்மாதம் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்- யாழ் மாநகர சபை

296 0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்த முடியாதவர்கள், காலாண்டுக்கான ஆதனவரியை குறித்த காலாண்டின் முதலாம் மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 5 வீதக் கழிவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாநகர சபையினர் அறிவித்துள்ளனர்.

வரியிறுப்பாளர் நலன்கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை தினங்களிலும் ஆதனவரி அறவீட்டு நடவடிக்கைகள் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் அறிவித்துள்ளனர்.