ஹூணுபிட்டி தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

248 0

வத்தளை – ஹூணுபிட்டி – ஜயந்தி மஹல் சந்தியில் உள்ள பொலித்தீன் கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலை ஊழியர் ஒருவர், தொழிற்சாலையை சுற்றி உள்ள சுழலை சுத்தப்படுத்தி, குப்பைகளுக்கு தீ வைத்த போது தொழிற்சாலைக்கு தீ பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து, 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீவிபத்தினால் அருகில் இருந்த 3 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.