அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளரின் விளக்கமறியலுக்கு எதிராக அமைதி போராட்டம்

242 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற முன்னிலையில் இந்த போராட்டம் இன்று இடம்பெற்றது.

நீதிமன்றத்தின் பிணைக்கான நிபந்தனைகளை மீறியமைக்காக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த அவரை விடுவித்த போது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனை மீறி கடந்த 19ஆம் திகதி தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாவே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவருடன் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 7 பேர் 2 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.