கடற்படை அதிகாரிகள் இருவர் விரைவில் கைது

243 0

கடற்படை அதிகாரிகள் இருவரை எதிர்காலத்தில் கைதுசெய்யவுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு பேர் காணாமல்போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை அதிகாரியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரை, கடந்த 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல்போகச் செய்ததாக கடற்படை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.