மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் 25 மாவட்டங்களுக்கான ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்தல் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த தேர்தலை நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை மாவட்டம்- சோமசுந்தரம், மைதிலி, திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன்.
வேலூர் மாநகர்- வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன், வேலூர் புறநகர்-டி.கே.எம். சின்னையா, மரகதம் குமரவேல், எஸ்.ஆறுமுகம்.
திருப்பத்தூர்-பா.வளர்மதி, வெங்கட்ராமன், கே.பி.கந்தன், திருவண்ணா மலை வடக்கு-சுப்பிரமணியன், தவமணி, திருவண்ணாமலை தெற்கு சேதுராமன், திருஞானசம்பந்தம்
கள்ளக்குறிச்சி- கே.கோபால், பவுன்ராஜ்
சேலம் புறநகர்- சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பி.கே. வைரமுத்து, சேலம் புறநகர்- தாமரை ராஜேந்திரன், ஆ.இளவரசன்
தருமபுரி-ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., சிவா, ராஜமாணிக்கம்
கிருஷ்ணகிரி கிழக்கு- கே.ஏ.கோபால், சிறுணியம் பலராமன், கிருஷ்ணகிரி மேற்கு – பா.பென்ஜமின், எஸ்.அப்துல்ரகீம்
நாமக்கல்-கமலக்கண்ணன், அருண்மொழி தேவன் எம்.எல்.ஏ.,
ஈரோடு மாநகர்- என்.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு- சொரத்தூர் ராஜேந்திரன், கோ.சூரியமூர்த்தி, ஈரோடு புறநகர் மேற்கு-எம்.சி.சம்பத், பு.தா.இளங்கோவன்
திருப்பூர் மாநகர்- மாபா. பாண்டியராஜன், வி.அலெக்சாண்டர், திருப்பூர் புறநகர் கிழக்கு- மாதவரம் மூர்த்தி, ஜி.கே.இன்பராஜ், திருப்பூர் புறநகர் மேற்கு-திருத்தணி கோ.அரி, பி.வி.ரமணா
கரூர்-வரகூர் அருணாசலம், ஆர்.டி.ராமச்சந்திரன்
கோவை மாநகர்-ரத்தினவேல், வெல்லமண்டி நடராஜன், கோவை புறநகர் வடக்கு-என்.ஆர்.சிவபதி, எம்.பரஞ்ஜோதி, கோவை புறநகர் தெற்கு-எஸ்.வளர் மதி, ப.குமார்