நாளையும் நீண்ட நேர மின்வெட்டு அமுல்

168 0
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின் வெட்டும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.