22 இந்திய மீனவர்கள் விடுதலை

102 0

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை,பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து நீதவான் ஜெ.கஜநிதிபாலன் விடுவித்து விடுதலை செய்தார்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில் ஒரு படகை அரசுடைமை ஆக்குமாறு நீதவான் கட்டளையிட்டார். குறித்த படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட மீனவர்களின் ஒருவராக காணப்பட்டமையினால் குறித்த படகு அரசுடமையாக்கப்பட்டது.

அத்துடன் மேலும் ஒரு படகு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும்ஏப்ரல் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 22 மீனவர்கள் இரண்டு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விடுவித்து விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள். அதன் பின்னர் அவர்கள் உரிய சட்ட நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.