பாகிஸ்தான் விமான படை விமானம் கீழே விழுந்து விபத்து- 2 விமானிகள் பலி

125 0

விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு, பாகிஸ்தான் விமான படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக, விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் விமானம் தரையில் விழுந்த போது வேறு எதுவும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் விமான படை தலைமையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மன்சேரா அருகே விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.