மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட அரசு உறுதியேற்றுள்ளது- மு.க.ஸ்டாலின்

222 0

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும், ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக நீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தி தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம்.  மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது.

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும், ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம் என கூறியுள்ளார்.