நுகேகொடை கூட்டத்திற்கு நுவரெலி யாவிலிருந்து எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள்

302 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் நாளை 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அங்கத்தவர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை நடைபெறவுள்ள நுகேகொட கூட்டத்திற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிரிக்கும் நோக்கில் சிறு சிறு கட்சிகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிழையான வழியில் கொண்டு செல்லும் வகையில் இக் கூட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் நல்லாட்சி அரசாங்கத்தை அடுத்த தேர்தல் வரை இல்லாதொழிக்க முடியாது. கடந்த காலங்களில் ஆட்சியை மாற்றப்போவதாக கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணியாக சென்றனர். பாரிய அளவிலான கூட்டங்களை நடத்தினர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையிலான நல்லாட்சியை 2020 ஆண்டு தேல்தல் வரை மாற்ற முடியாது என்றார்.