கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

232 0

கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு தமிழர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை லுத்தினர் கமாண்டர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு குறித்த இருவரும் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ​மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய லுத்தினர் கர்ணல் ஒருவரைக் கைதுசெய்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ஸ்ரொக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை உறுப்பினர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.