தென்கொரியாவில் 3¼ லட்சம் பேருக்கு கொரோனா: வியட்நாமில் 1.41 லட்சம் பேர் பாதிப்பு

133 0

தென்கொரியாவில் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதேபோல் சீனா, மலேசியா ஆகிய ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது. அந்த வகையில், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இப்படி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 151 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் வியட்நாமில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 58 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் சீனா, மலேசியா ஆகிய ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.