கோட்டாபய ராஜினாமா: பேச்சாளர் விளக்கம்

187 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

அந்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.

“நெருக்கடியான நேரத்தில் ஓடிப்போகும் மனிதன் அல்லர். அவர் ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானவை” என்றும் தெரிவித்துள்ளார்.