சீதுவை ரயில் விபத்தில் ஒருவர் பலி!

110 0

சீதுவை – தலுபொத வீதி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 27 வயதுடைய கட்டுநாயக்க, குரண பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்