போலியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் கைது

151 0

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்க செல்ல முற்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 64 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் நேற்று  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு  தலா 5 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு , குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.