கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு!

145 0

குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தெஹிவளை, கல்கிசை , இரத்மலானை, கொழும்பு 05 & 06, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை மற்றும் ஹிம்புட்டானை ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்துடன் குடிநீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.