வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் – அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த சஜித்

163 0

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் சுமையை மட்டுமே வழங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘முழு நாடும் அழிவில், நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனை கூறினார்.

வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது மக்கள் தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் என அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.