8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!

287 0

எட்டாவது சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

”வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெறும். கடந்த காலங்களில் 200 கண்காட்சி கூடங்களுடன் நடாத்தப்பட்ட சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி இந்த ஆண்டு  300 கண்காட்சி கூடங்களுடன் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கடந்த காலங்களில் இக்கண்காட்சியை 50ஆயிரம் பேர் பார்வையிட்டனர் எனவும் இந்த ஆண்டு   60 ஆயிரம் பேர் பார்வையிடுவர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

image-0-02-06-5ab939b1f7bcf77ccd22604a918ceeec72874b9f5fa955899790a32b21b11d1f-vimage-0-02-06-f752dffb4032d9d7eb1ad86f9c53b90b999a83d8abdbc1c1346344a35c21177a-vimage-0-02-06-dabfee2bb4533e1768b59a4e96a321b4cc08bc120b3abdf09cf215c2f4e3f8c2-v