ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

286 0

இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றம் செய்ய வேண்டிய ஏதாவது இருக்குமாயின் அதற்காவும் மக்களின் ஏதேனும் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்காக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் போன்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தில் இருந்து கொண்ட விசாரிக்க முடிந்தமையானது உண்மையான புரட்சியின் ஆரம்பம் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.