நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்- ரணில்

252 0

அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, அதிகாரத்தைப்பகிர்வதற்காக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு சபைநிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தின்முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தினால் பொருளாதார அபிவிருத்திக்கும்பாதிப்பு ஏற்பட்டது.

இனங்களுக்கிடையிலான வேற்றுமையினால் நாடு பின்நோக்கித் தள்ளப்பட்டதாகவும்,யுத்தத்தின் பின்னரும் எதிர்ப்பார்க்கப்பட்ட வெற்றிகளை அடைந்து கொள்ள முடியவில்லைஎன்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகம், தேசிய ஒற்றுமை என்பனவற்றை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், இலங்கையர்கள் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.