யாழில் தாய் மற்றும் மகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்!

167 0

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாயையும்,மகளையும் நபரொருவர் கத்தியால் குத்தி விட்டு தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகிய இருவர் மீதும் நபரொருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு , தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரையும் மாய்க்க முயன்றுள்ளார்.

இதன்போது சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.