வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

461 0

தமிழர்களை புதைகுழியில் தள்ளும் 13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பேரணியானது வவுனியா  கச்சேரிக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து பிற்பகல் 2. 30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏ9 வீதி வழியாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. கிட்டு பூங்கா பிரகடனம் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ். தவபாலன் வாசிக்கப்பட்டதுடன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தது.

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் கட்சியினது சட்ட ஆலோசகர் காண்டீபன், ஊடக பேச்சாளர் சுகாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,  என  ஆயிரக்கணக்கான   தமிழ் மக்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வருகின்றது.