13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணி, வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நிறைவற்றது.இதன்போது கொள்கைப் பிரகடன உரையும் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் என கூறி, தமிழரசுக் கட்சி உட்பட 6 தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் தீர்வாக கோரியுள்ளமையை கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெறுகிற்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்திலும் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்தனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் பங்கேற்றனர்.