கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசுமாம்: சிறிதரன் உறுதி

181 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான
சந்திப்புத்தொடர்பில் யார் என்ன கருத்தை கூறினாலும், கூட்டமைப்பின் தலைமை சந்திப்பு நிகழும்
என கூறியமைக்கு அமைய சந்திப்பு நிகழ்ந்தே தீரும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்
தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்ட
சிறிதரன் எம்.பி, சந்திப்புத் தொடர்பில் பங்காளிக் கட்சிகள் எதிர்க் கருத்தை வெளியிடுகின்றார்கள் என்பதற்காக, தமிழரசுக் கட்சி அதற்கு பதிலளித்து, கூட்டமைப்புக்குள் பிளவை மேலும் வலுப்படுத்த
விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
காணி அபகரிப்பு போன்ற வட-கிழக்கில் இடம்பெறும் அத்தமீறிய சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேடியாக கூறப்படும் என்றும், அண்மையில் கோட்டாபயவின் வாசஸ்தலத்தின்
முன் இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பும் அமையும் எனவும் சிறிதரன் எம்.பி
சுட்டிக்காட்டியுள்ளார்.